SHARE

யாழ்.மல்லாகம் பகுதியில் இளைஞர் ஒருவரை சுட்டு படுகொலை செய்த பொலிஸ் உத்தியோகஸ்தர் கைது செய்யபட்டு உள்ளதாகவும் அவரை நீதிமன்றில் முற்படுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாகவும் வடமாகாண சிரேஸ்ட பொலிஸ் மா அதிபர் ரொஷான் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார். 

அது தொடர்பி மேலும் தெரிவிக்கையில் ,

மல்லாகம் துப்பாக்கி சூட்டு சம்பவம் தொடர்பில் விஷேட பொலிஸ் குழு அமைக்கபட்டு உள்ளது. அக்குழுவினர் தற்போது விசாரணைகளை முன்னெடுத்துவருகின்றனர்.

விசாரணைகளின் முடிவிலேயே சம்பவம் தொடர்பில் கூற முடியும். விசாரணைகளின் முடிவில் துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்ட பொலிஸ் உத்தியோகஸ்தரை நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கை எடுப்போம் என தெரிவித்தார்.

Print Friendly, PDF & Email