SHARE

கரும்புலிகள் நாள் இன்று(05) தாயகத்திலும் புலம்பெயர் தேசங்களிலும் உணர்வுபூர்வமாக அனுஷ்டிக்கப்பட்டு வரும் நிலையில் யாழ்.பல்கலைக்கழகத்திலும் இன்று பிற்பகல் உணர்வுபூர்வ அஞ்சலி செலுத்தப்பட்டது.

பிற்பகல்-06.05 மணியளவில் யாழ்.பல்கலைக்கழக வளாகத்தில் பிரத்தியேகமாக அமைக்கப்பட்டுள்ளதொரு பகுதியில் கரும்புலியின் உருவப்படம் வைக்கப்பட்டு ஈகைச்சுடரேற்றி அக வணக்கம் செலுத்தப்பட்டது. அதனைத் தொடர்ந்து பல்கலைக்கழக மாணவர்கள் கரும்புலிகளுக்கு உணர்வுபூர்வமாக மலரஞ்சலி செலுத்தினர்.

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் இடம்பெற்ற இந்த நிகழ்வில் பெருமளவு மாணவர்கள் கலந்து கொண்டனர்.

இந்த நிகழ்வின் போது தமிழீழ எழுச்சிப் பாடல்கள் உரத்து ஒலிக்கவிடப்பட்டதுடன், அஞ்சலி நிகழ்வு இடம்பெற்ற பகுதியில் சிவப்பு, மஞ்சள் வர்ணக் கொடிகள் பறக்கவிடப்பட்டிருந்தது.

Print Friendly, PDF & Email