SHARE

நோர்வூட் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சென்.ஜோன்டிலரி ஆற்றில் பெண் ஒருவரது சடலம் மீட்கப்பட்டுள்ளது.

இந்த சடலம் இன்று காலை 9 மணியளவில் கண்டுபிடிக்கப்பட்டு, மீட்கப்பட்டதாக நோர்வூட் பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த ஆற்றுப் பகுதியில் சடலமொன்று கிடப்பதாக அப்பகுதியில் உள்ள தேயிலை மலைக்கு வேலைக்குச் சென்றவர்கள் பொலிஸாருக்குத் தகவல் வழங்கினர். இதைத் தொடர்ந்து, குறித்த இடத்துக்கு விரைந்த பொலிஸார் சடலத்தை மீட்டனர்.

30 தொடக்கம் 35 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவரது சடலமே இவ்வாறு மீட்கப்பட்டுள்ளது.
சடலம் இதுவரை அடையாளம் காணப்படாத நிலையில் மரண விசாரணைகளின் பின் நாவலப்பிட்டி வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லப்படவுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை நோர்வூட் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Print Friendly, PDF & Email