SHARE

இரண்டு மோட்டார் சைக்கிளில் வாள் மற்றும் இரும்புக் கம்பிகளுடன் வந்த நான்கு இளைஞர்களை மானிப்பாய் பொலிஸார் கைது செய்துள்ளனர்.

மானிப்பாய் பொலிஸார் மேற்கொண்ட சுற்றுக் காவலின் போது கல்லுண்டா வெளிப் பகிதியில் வைத்து நேற்றிரவு கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

யாழ் மாவட்டத்தில் அண்மைக் காலமாக அதிகரித்து வருகின்ற வாள்வெட்டுச் சம்பவங்கள் உள்ளிட்ட வன்முறைகளையடுத்து பொலிஸ் ரோந்து பொலிஸ் காவல் என்பன பல இடங்களிலும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இவ்வாறு மானிப்பாய் பொலிஸார் மேற்கொண்ட பொலிஸ் சுற்றுக் காவலின் போதே நேற்றிரவு வாள்கள் கம்பிகளுடன் மோட்டார் சைக்கிலில் வந்த நான்கு பேரும் கைது செய்யப்பட்டு விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

Print Friendly, PDF & Email