SHARE

கிளிநொச்சி மாவட்டத்தில் கடந்த மே மாதம் 25ஆம் திகதி முதல் 30ஆம் திகதி வரையிலான கால பகுதியில் குழந்தை பிரசவித்தவர்களின் தகவல்களை பயங்கரவாத தடுப்பு பிரிவு பொலிஸார் சேகரித்து வருகின்றனர்.

மருத்துவமனைகள் , வீடுகளில் குழந்தை பிரசவித்தவர்களின் தகவல்களை சேகரித்து வருகின்றனர். தகவல் சேகரிப்பதற்கான காரணம் தெரியப்படுத்தப்படவில்லை.

அது தொடர்பில், வடமாகாண சுகாதார அமைச்சின் செயலாளர் எஸ். திருவரங்கனிடம் கேட்ட போது,

குறித்த விபரங்களை தருமாறு எமது அமைச்சிடம் கோரி இருந்தார்கள். அதனை வழங்க எமக்கு அனுமதியில்லை. அது தொடர்பில் மத்திய சுகாதார அமைச்சுக்கு தெரியப்படுத்தி உள்ளோம். அங்கிருந்து விபரங்களை கொடுக்கும்மாறு பணித்தால் , தகவல்களை வழங்குவோம் என தெரிவித்தார்.

Print Friendly, PDF & Email