SHARE

வடக்கு மீனவர்களுக்கு கடற்தொழில் பயற்சிகள் சமுத்திரவியல் பல்கலைகழகத்தில் ஆரம்பிக்கப்பட்டு உள்ளதாக ஊர்காவற்துறை கடற்தொழில் சமாசத்தின் தலைவர் அன்னலிங்கம் அன்னராசா தெரிவித்துள்ளார்.

யாழ்.ஊடக அமையத்தில் இன்றைய தினம் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே இதனை தெரிவித்தார். மேலும் தெரிவிக்கையில் ,

வடக்கு மீனவர்கள் தொழினுட்பம் மற்றும் தொழில் ரீதியான பயிற்சிகள் இன்றி தொழில் செய்கின்றார்கள். அவர்களை தொழில் ரீதியாக முன்னேற்ற பயிற்சிகள் ஆரம்பிக்கப்பட்டு உள்ளது.

சமுத்திரவியல் பல்கலை கழகத்தில் குறுகிய கால பயிற்சி நெறிகள் ஆரம்பிக்கப்பட்டு உள்ளது. கடலட்டை பிடித்தல் , ஆழ்கடல் சுழி ஓடல் , ஜீபிஎஸ் பாவனை உள்ளிட்ட பயிற்சிகள் நடைபெறுகின்ற.

அந்த பயிற்சி நெறிகளில் வடக்கு மீனவர்கள் இணைந்து கொண்டு தமது தொழில் திறனை வளர்த்துக்கொள்ள முடியும் என தெரிவித்தார்.

Print Friendly, PDF & Email