SHARE

இலங்கையுடனானா ஆயுதவிற்பனையை பிரித்தானியா நிறுத்தவெண்டுமென்ற, புலம் பெயர் அரசியல் செயற்பாட்டாளரான திலக் அன்றூஸின் கோரிக்கை தொடர்பில் புதிய வெளிவிவகார அமைச்சர் ஜெர்மி ஹன்ட்டுக்கு (Jeremy Hunt) நேரடியான கடிதம் ஒன்றை அனுப்பி அவரது பதிலை கோருவதாக, புட்னி- ரொஹம்டன் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் ஜஸ்டின் கிறீனிங் தெரிவித்துள்ளார்.

ஆயுத விற்பனையை நிறுத்தக்கோரிய விடயம் தொடர்பில் நாடாளுமன்ற விவாதத்திற்கு கொண்டுவருவதற்கான பிரேணைக்கு (Early Day Motion) ஆதரவு வழங்கக்கோரி அன்றூஸினால் அவருக்கு அனுப்பி வைக்கப்பட்ட மனுவிற்கே இவ்வாறு பதிலளித்துள்ளார்.

அதேவேளை, நாடாளுமன்ற விவாதத்திற்கு கொண்டுவருவதற்கான பிரேரணையில் (E.D.M)  பொது விதிகளுக்கு அமைவாக தான் கையொப்பமிடுவதில்லை எனவும் மறுத்துள்ளார்.

தவிர, பிரித்தானியாவிடம் ஆயுதக் கொள்வனவுகளை மேற்கொள்ளும் நாடுகள் கொள்வனவு செய்யும் ஆயுதங்களைக் கொண்டு உள்நாட்டில் மனித உரிமை மீறல் செயல்பாடுகள் மற்றும் அடக்கு முறைகளை மேற்கொள்வது கண்டறியப்பட்டால் அந்நாடுகளுடனானா ஒப்பந்தம் ஐ.நா. விதிகளுக்கு அமைவாக நிறுத்தப்படும் எனவும் அவர் அதில் குறிப்பிட்டுள்ளார்.

திலக் அன்றூஸ் கடந்த ஆண்டு நாடாளுமன்ற உறுப்பினர் ஜஸ்டின் கிறீங்கை நேரில் சந்தித்து ஆயுதவிற்பனையை நிறுத்தும் கோரிக்கையை முன்வைத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

கொடிய யுத்தத்தின் பின்னரும் தமிழ் மக்கள் மீதான சிங்கள பேரினவாதத்தின் அடக்கு முறைக்கு பிரதான காரணியாக  ஆயுதகொள்வனவே காணப்படுகிறது.

எனவே, இலங்கைக்கான ஆயத விற்பனையை பிரித்தரினயா நிறுத்த வேண்மென கோரி பிரித்தானிய வாழ் தமிழ் இளையோர் தமிழ் தவகல் நடுவத்துடன் இணைந்து முன்னெடுத்துவரும் செயற்பாட்டின் பயனாக குறித்த விவகாரம் பாராளுமன்ற விவாதத்திற்கு கொண்டுவரப்படவுள்ளது.

அந்தவகையில் நாடாளுமன்ற உறுப்பினர் எட்வேர்ட் டேவியினால் முன்வைக்கப்பட்டுள்ள குறித்த விடயம் தொடர்பிலான பாராளுமன்ற விவாதத்திற்கான பிரேரணையில் (EDM) இதுவரையில் இதுவரையில் 24 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கையொப்பம் இட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


Print Friendly, PDF & Email