SHARE

வாள் வெட்டு சம்பவங்களுடன் தொடர்புடையவர்கள் எனும் குற்றசாட்டில் கைது செய்யப்பட்டு, விளக்கமறியலில்  தடுத்து வைக்கப்பட்டு உள்ள மூன்று சந்தேகநபர்கள் உயர்தர பரீட்சை எழுதி வருகின்றனர்.

தென்மராட்சி பகுதிகளை சேர்ந்த 10 இளைஞர்களை, வாள் வெட்டு சம்பவங்களுடன் தொடர்புடையவர்கள் என மானிப்பாய் பொலிசார் கடந்த 4 ஆம் திகதி கைது செய்தனர்.

அவர்கள் அனைவரும் மல்லாகம் நீதிவான் நீதிமன்றில் முற்படுத்தப்பட்டு நீதிமன்ற உத்தரவின் பேரில் விளக்கமறியலில் தடுத்து வைக்கப்பட்டு உள்ளனர்.

அவர்களின் மூவர் நடைபெற்றுக்கொண்டு இருக்கும் க.பொ.த உயர்தர பரீட்சையில் தோற்றவுள்ளனர் என நீதிமன்றின் கவனத்திற்கு கொண்டு வரப்பட்டது.

அதனடிப்படையில் அவர்கள் மூவரும் சிறைச்சாலை அத்தியட்சகரின் கண்காணிப்பின் கீழ் பரீட்சை எழுதுவதற்கு மன்று அனுமதி அளித்திருந்தது.

அந்நிலையில் குறித்த மூன்று மாணவர்களும் சிறைச்சாலை அத்தியட்சகரின் கண்காணிப்பின் கீழ் பரீட்சையில் தோற்றி வருகின்றனர்.

Print Friendly, PDF & Email