SHARE

யாழில்.கேக் விற்பனை நிலையம் எனும் பெயரில் மாவா போதை பொருள் விற்பனை செய்து வந்த நிலையத்தை போலீசார் முற்றுகையிட்டு சோதனை நடாத்திய போது , 3 கிலோ மாவா போதைப்பொருளை மீட்டுள்ளனர்.

யாழ்.ஐந்து சந்தி பகுதியில் கேக் விற்பனை நிலையம் எனும் பெயரில் மாவா போதை பொருள் விற்பனை செய்யப்படுவதாக யாழ்.பொலிசாருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் நேற்றைய தினம் செவ்வாய்க்கிழமை மாலை குறித்த விற்பனை நிலையத்தை பொலிசார் முற்றுகையிட்டு தேடுதல் நடத்தினார்கள்.

அதன் போது குறித்த விற்பனை நிலையத்தில் இருந்து விற்பனைக்கு தயாராக வைக்கப்பட்டு இருந்த மாவா போதை பொருள் 3 கிலோவை பொலிசார் மீட்டுள்ளனர். அத்துடன் கடையில் விற்பனைக்கு நின்ற இளைஞர் ஒருவரையும் பொலிசார் கைது செய்தனர்.

அதேவேளை குறித்த விற்பனை நிலையத்தில் இருந்து கடந்த ஏப்பிரல் மாதம் 19ஆம் திகதியும் விற்பனைக்கு தயாராக வைக்கப்பட்டு இருந்த பெருமளவான மாவா போதை பொருளும்  மற்றும் மாவா போதை பொருளை தயாரிக்க பயன்படுத்தப்படும் மூல பொருட்கள் பெருமளவையும் தாம் கைப்பற்றி இருந்தோம் என பொலிசார் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Print Friendly, PDF & Email