SHARE

படையினரால் அண்மையில் விடுவிக்கப்பட்ட பிரதேசத்திலிருந்து மனித எலும்புக்கூட்டுத்தொகுதி மீட்கப்பட்டுள்ளது.காங்கேசன்துறை பகுதியில் உள்ள புகையிரத பாதையில் இருந்து சுமார் 50 மீற்றர் தூரத்தில் இருந்து குறித்த மனித எழும்புக்கூடு இன்று புதன்கிழமை காலை மீட்கபட்டு உள்ளது.

குறித்த எழும்புக்கூடு நான்கு மாதங்ககளிற்கு முன்னதாக உயிரிழந்தவரது ஆக இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகின்றது.அத்துடன் அது ஆண் ஒருவருடையது என தெரிவிக்கப்படுகின்றது.

அது தொடர்பில் காங்கேசன்துறை பொலிசாருக்கு அறிவிக்கப்பட்டதை அடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற பொலிசார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

மக்கள் பயன்பாட்டிற்கென விடுக்கப்பட்ட பகுதியியிலேயே குறித்த மனித எலும்புக்கூடு மீட்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Print Friendly, PDF & Email