SHARE

தியாக தீபம் லெப்.கேணல் திலீபனின் 31 ஆம் ஆண்டு நினைவேந்தலின் ஆரம்ப நினைவு நாள் நிகழ்வு நல்லூர் மற்றும் யாழ் பல்கலைக்கழகம் உட்பட ஈழத்தின் பல பிரதேசங்களில் தமிழர்களால் உணர்வு பூர்வமாக நினைவு கூறப்பட்டது.

5 அம்சக்கோரிக்ளை முன்வைத்து நல்லூர் கந்தசுவாமி கோவில் முன்றலில் உன்னாவிரதப்போராட்டத்தை ஆரம்பித்த திலீபன் 12 நாட்கள் நீர் கூட அருந்தாது தனது அகிம்சைப்போராட்டத்தை தொடந்து வீரகாவியமானார்.

அந்தவகையில் திலீபன் தனது உண்ணாவிரதப் போராட்டத்தை ஆரம்பித்த அதே நாளான இன்று உலகெங்கும் வாழும் தமிழர்களால் அவர் தியாகம் நினைவு கூறப்பட்டது.

இந்நிலையில் ஈழத்தில் நல்லூர், யாழ் பல்கலைக்கழகம், முல்லைத்தீவு, வாழைச்சேனை, சுங்கான் கேணி, தீவகம் வேலணை மற்று மட்டக்களப்பு மாவடி ஆகிய பிரதேசங்களில் தியாக தீபம் திலீபனுக்கு உணர்வுபூர்வமாக அஞ்சலி செய்யப்பட்டது.

நல்லூர்

யாழ் பல்கலைக்கழகம்

 

 

மட்டக்களப்பு

முல்லைத்தீவு

Print Friendly, PDF & Email