SHARE

-முன்னாள் போராளி விக்னா பிரித்தானிய நாடாளுமன்றில் சாட்சி

விடுதலைப்புலிகள் அமைப்பின் உறுப்பினர்கள் மட்டுமின்றி அவர்களுக்கு ஆதரவாக எவர் இருக்கிறார்கள் என இலங்கை அரசு சந்தேகம் கொள்கிறோதோ அவர்கள் அனைவரும் காணமால் ஆக்கப்படுகிறார்கள் என முன்னாள் போராளியான விக்னா திருகுணபாலசிங்கம் தெரிவித்துள்ளார்.

இறுதிப்போரில் இராணுவத்தினரிடம் சரணடைந்து பின்னர் பிரித்தானியாவுக்கு புலம்பெயர்ந்துள்ள அவர் பிரித்தானிய பாராளுமன்றத்தில் நடைபெற்ற காணமல் ஆக்கப்பட்டோருக்கான மாநாட்டில் கலந்து கொண்டு சாட்சியம் அளித்த போதே அவர் இவ்வாறு கூறினார்.

காணமல் ஆக்கப்பட்ட உறவுகளுக்கு நீதி கோரியும் தமிழ் மக்களுக்கு எதிராக நடத்தப்பட்ட இனப்படுகொலைக்கு இலங்கை அரசை பொறுப்புகூற பிரித்தானிய அரசை வலியுறுத்தியும் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் ஏற்பாட்டில் காணாமல் ஆக்கப்பட்டோருக்கான அனைத்துலக நாள் மாநாடு பிரித்தானிய நாடாளுமன்றத்தில் நேற்று முன்தினம் நடைபெற்றது.

இந்த மாநாட்டில் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் சிலரது நேரடி சாட்சியங்களும் முன்வைக்கப்பட்டது. இந்நிலையில் இதில் கலந்து கொண்டு சாட்சியமளித்த போதே விக்னா மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அங்கு அவர் அளித்த சாட்சியத்தின் முழுவடிவம் பின்வருமாறு,

 

Print Friendly, PDF & Email