அரசியல்துறை பொறுப்பாளர் பிரிகேடியர் சு.ப. தமிழ்ச்செல்வன் மற்றும் அவருடன் வீரகாவியமான ஆறுவேங்கைகளின் 11 ஆம் ஆண்டு நினைவு வணக்கமும் மகளிர் அரசியல் துறை பொறுப்பாளர் தமிழினி அவர்களின் 3 ஆவது வருட நினைவு நிகழ்வும் பிரித்தானியாவில் நேற்று நினைவு கூறப்பட்டது.
பிரித்தானியா வாழ் புலம்பெர் இளையோரின் ஏற்பாட்டில் ஹரோவில் நடைபெற்ற இந்த உணர்வுபூர்வ நினைவஞ்சலி நிகழ்வில் பெருமளவிலானோர் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினர்.
கடந்த 2007 ஆம் ஆண்டு கார்த்திகை மாதம் 02 ஆம் திகதி கிளிநொச்சி சமாதான செயலகம் மீது இலைங்கை வான்படையினால் மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில் பிரிகேடியர் சு.ப. தமிழ்ச்செல்வன் மற்றும் லெப்.கேணல் அன்புமணி, மேஜர் மிகுந்தன், மேஜர் கலைச்செல்வன், மேஜர் செல்லத்தம்பி, லெப் ஆட்சிவேல், லெப். முல்லைக்குமரன் ஆகியோர் வீரச்சாவினைத் தழுவிக்கொண்டனர்.