பிரதமரை நியமிக்கும் அதிகாரம் தனக்கே உள்ளது என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
கொழும்பின் பரபரப்பான அரசியல் சூழலில் சபாநாயகர் அனுப்பி வைத்த கடிதத்தை நிராகரித்து அனுப்பி வைத்துள்ள பதில் கடிதத்திலேயே இதனை தெரிவித்துள்ளார்.
மேலும் அதில்,
அரசியலமைப்பையும் பாராளுமன்ற நிலையியற் கட்டளைகளையும் சம்பிரதாயங்களையும் மீறிவிட்டீர்கள். நாடாளுமன்றில் அங்கீகரிக்காமல் கையொப்பங்களையும் அனுப்பியுள்ளீர்கள். பிரதமரை நியமிக்கும் அதிகாரம் எனக்கே உள்ளது உங்களுக்கு அல்ல.” என தெரிவிக்கப்பட்டுள்ளது.