SHARE

உணர்ச்சிக் கவிஞர் காசி ஆனந்தன் எழுதிய நூல்கள் வெளியீட்டு விழா இன்று சென்னையில் நடைபெறுகிறது.

சென்னை மேற்கு மாம்பலம் சந்திரசேகர் திருமண அரங்கில் இன்று (11) மாலை 5 மணியளவில் நடைபெறும் நிகழ்வில் காசி ஆனந்தன் அவர்கள் எழுதிய ”தமிழன் எதிரி தமிழன்” மற்றும் “பெண்பா” ஆகிய இரு நூல்கள் வெளியீட்டு செய்து வைக்கப்படவுள்ளது.

தமிழர்தேசிய இயக்கத்தின் தலைவர் திரு. பழ நெடுமாறன் அவர்களின் தலைமையில் நடந்தேறும் இவ்விழாவில் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்ற கழகத்தலைவர் திரு. வைகோ அவர்கள் நூல் வெளியீட்டு சிறப்புரையாற்றுகிறார்கள்.

இயக்குநர் புகழேந்தி தங்கராசு, அமுதசுரபி ஆசிரியர் திருப்பூர் கிருஷ்ணன், இயக்குநர் கெளதமன், வழக்கறிஞர் த. பானுமதி, எழுத்தாளர் சூரிய தீபன் உள்ளிட்டோர் கருத்துரை வழங்குகிறார்கள்.

இந்நிகழ்வில் தமிழின உணர்வாளர்கள் அனைவரும் திரளாக கலந்துகொண்டு விழாவை சிறப்பிக்க  அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

Print Friendly, PDF & Email