SHARE

உணர்ச்சிக் கவிஞர் காசி ஆனந்தன் எழுதிய நூல்கள் வெளியீட்டு விழா இன்று சென்னையில் நடைபெற்றது.

சென்னை மேற்கு மாம்பலம் சந்திரசேகர் திருமண அரங்கில் இன்று (11) மாலை 5 மணியளவில் நடைபெற்ற நிகழ்வில் காசி ஆனந்தன் அவர்கள் எழுதிய ”தமிழன் எதிரி தமிழன்” மற்றும் “பெண்பா” ஆகிய இரு நூல்கள் வெளியீட்டு செய்து வைக்கப்பட்டது.

தமிழர்தேசிய இயக்கத்தின் தலைவர் திரு. பழ நெடுமாறன் அவர்களின் தலைமையில் நடந்த  இவ்விழாவில், மறுமலர்ச்சி திராவிட முன்னேற்ற கழகத்தலைவர் திரு. வைகோ அவர்கள் நூல் வெளியீட்டு சிறப்புரையாற்றினார்.

அதேவேளை, இயக்குநர் புகழேந்தி தங்கராசு, அமுதசுரபி ஆசிரியர் திருப்பூர் கிருஷ்ணன், இயக்குநர் கெளதமன், வழக்கறிஞர் த. பானுமதி, எழுத்தாளர் சூரிய தீபன் உள்ளிட்டோர் கருத்துரை வழங்கினர்.

Print Friendly, PDF & Email