SHARE

பிரித்தானிய நாடுமன்ற உறுப்பினரும் நீதித்துறை செயலாளருமான Lucy Frazer எம்.பி.யை சந்தித்த தமிழ் தகவல் நடுவத்தின் உறுப்பினர்களான பற்றிக் வசந்தராஜன் மற்றும் நந்தகோபன் சிவராசா ஆகியோர் இலங்கையில் தமிழ் மக்களுக்கு எதிராக சிங்களப்பேரினவாதத்தால் மேற்கொள்ளப்பட்டுவரும் திட்டமிட்ட இன அழிப்பு குறித்து கலந்துரையாடியதுடன் பிரித்தானிய பாராளுமன்றில் இவைகள் குறித்து பேசும் படியும் கோரிக்கையினையும் முன்வைத்துள்ளனர்.

லண்டன் ஹேம்பிரியில் நேற்று நடைபெற்ற இந்த சந்திப்பில் மேலும்,

தமிழர் தாயகப் பகுதிகளில் நடைபெற்றுவரும் சிங்கள குடியேற்றங்கள் இதனைவிட முக்கியமாக பிரிட்டனின் இலங்கைக்கான ஆயுத விநியோகம் அதனால் தமிழ் மக்கள் தொடர்ந்தும் இலங்கை அரசினால் அடக்கப்பட்டு வருகின்றமை போன்ற பல விடயங்களும் இந்த சந்திப்பில் கலந்துரையாடப்பட்டன.

Print Friendly, PDF & Email