SHARE

மன்னார் மனித புதைகுழியில் மீட்கப்பட்ட மனித எச்சங்களின் மாதிரிகள் 300 தொடக்கம் 500 ஆண்டுகள் இடைப்பட்டவை என்று அமெரிக்காவின் காபன் ஆய்வு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

1499 தொடக்கம் 1719ஆம் ஆண்டுவரையான காலப்பகுதியில் புதைக்கப்பட்ட மனித உடலங்களின் எச்சங்களே இவை என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

மன்னார் மனித புதை குழியிலிருந்து மீட்கப்பட்ட மனித எச்சங்களின் மாதிரிகளை ஆய்வு செய்த புளோரிடா ஆய்வு கூடமே இதனைத் தெரிவித்துள்ளது.

குறித்த மனித எச்சங்கள் 1404 முதல் 1450 ஆண்டிற்குட்பட்டவையாக இருப்பதற்கான 95 சதவீத சாத்தியக்கூறுகள் அதேவேளை 1417 முதல் 1440 ஆம் ஆண்டிற்குட்பட்டவையாக இருப்பதற்கான 68 சதவீத வாய்ப்பபுக்களும் உள்ளதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த காலப்பகுதி சங்கிலிய மன்னனின் ஆட்சிக்காலத்துக்குட்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

புதைகுழியில் இருந்து மீட்கப்பட்ட 335 எலும்புக்கூடுகளில்இ தெரிவு செய்யப்பட்ட 6 எலும்பக்கூடுகளின் மாதிரிகள் அமெரிக்காவுக்கு அனுப்பப்பட்டுஇ புளோரிடாவில் உள்ள ஆய்வகத்தில் கார்பன் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

இந்த ஆய்வு முடிவுகள் அதிகாரபூர்வமாக நேற்றுமுன்தினம் மன்னார் நீதிவான் நீதிமன்றத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

Print Friendly, PDF & Email