SHARE

இலங்கையை ஆட்டம் காண வைத்துள்ள அப்பாவி பொதுமக்கள் மீதான தீவிரவாதிகளின் தொடர் தற்கொலை குண்டுத் தாக்குதலில் கொழும்பிலுள்ள ஹோட்டல்கள் மீது தாக்குதல்
மேற்கொண்ட தற்கொலை குண்டு தாரிகளின் இருவரின் புகைப்படங்கள் வெளியாகியுள்ளன.

Shangri-La ஹொட்டேல் மற்றும் Cinnamon Grand ஹொட்டேல் ஆகியவற்றின் மீது தாக்குதலை மேற்கொண்ட சகோதரர்களான இன்ஷாப் மற்றும் இல்ஹாம் ஆகியோரிஜன் புகைப்படங்களை இங்கிலாந்தின் டெய்லி மெயில் இணையம் சற்று முன்னர் வெளியிட்டுள்ளது.

ஆதில் கொழும்மிலுள்ள கோஸ்வரர் ஒருவரின் பிள்ளைகளான மேற்படி இருவருள் மூத்த மகன் இன்ஷாப்; என அறியப்பட்டுள்ளது. ஹோட்டல் மீதான தாக்குதலையடுத்து மாளிகாவத்தையிலுள்ள அவரது வீட்டை பொலிஸாரும் அதிரடிப்படையினரும் சுற்றிவளைத்து சோதனைக்கு உட்படுத்தியவேளை வீட்டினினுள் இருந்த அவரது கர்பிணி மனைவி தன் உடலில் கட்டியிருந்த குண்டை வெடிக்க வைத்து தற்கொலை செய்து கொண்டார்.

இதன் போது அவரது வயிற்றில் இருந்த குழந்தையுடன் சேர்த்து வேறு இரண்டு பிள்ளைகளும் காவல்துறையினரும் கொல்லப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Print Friendly, PDF & Email