SHARE

பொதுபலசேனாவின் பௌத்தமதகுரு ஞானசாரதேரரிற்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பொதுமன்னிப்பு வழங்கியுள்ளதன் காரணமாக  ஊடகவியலாளர் பிரகீத் எக்னலிகொடவின்  குடும்பத்தவர்களின் உயிர்களிற்கு ஆபத்து ஏற்பட்டுள்ளது என ஊடகவியலாளரின் மனைவி சந்தியா எக்னலிகொட தெரிவித்துள்ளார்

பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிற்கு  எழுதியுள்ள கடிதத்தில் அவர் இதனை  குறிப்பிட்டுள்ளார்.

ஞானசார தேரர் விடுதலைசெய்யப்பட்டுள்ளமையால் எனது குடும்பத்தவர்களின் உயிர்களிற்கு பாரதூரமான ஆபத்து ஏற்பட்டுள்ளது என குறிப்பிட்டுள்ள அவர் உரிய பாதுகாப்பை வழங்குமாறு பிரதமரை கேட்டுக்கொண்டுள்ளார்.

ஞானசார தேரர் சிறையிலிருக்கும்போதே அவரது ஆதரவாளர்கள் என்னை தூற்றி வந்துள்ளனர் என குறிப்பிட்டுள்ள அவர் ஞானசாரர் விடுதலையான பின்னரும் சமூகஊடகங்களில் இது தொடர்வதாக குறிப்பிட்டுள்ளார்.

Print Friendly, PDF & Email