SHARE

: உறவுகள் கண்ணீர் போராட்டம்

எமது உயிர் எம்மை விட்டு பிரிவதற்கு முன்னர் உறவுகளை விடுதலை செய்யுங்களென கூறி காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் கண்ணீர் போராட்டமொன்றினை நடத்தியுள்ளனர்.

 சுழற்சி முறையில் போராட்டம் நடத்திவரும் வவுனியா காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள், இன்று (திங்கட்கிழமை) அரசியல் கைதிகளில் விடுதலையை துரிதப்படுத்துமாறு வலியுறுத்தி கண்ணீர்ப் போராட்டம் ஒன்றினை மேற்கொண்டனர்.

இதன்போது ‘நீண்ட காலமாக சிறையில் தடுத்துவைக்கப்பட்டுள்ள அரசியல் கைதிகளை உடனே விடுதலை செய்’, ‘அமெரிக்காவே சிங்கள- பௌத்த ஒடுக்கு முறையிலிருந்து தமிழர்களை விடுவிக்க உன் உதவி தேவை’, ‘எங்கள் உயிர் பிரிவதற்கு முன்பு எமது பிள்ளைகளை எங்களிடம் விடுவிக்கவும்’, ‘தமிழ் அரசியல் கைதிகளுக்கான விடுதலை என்றால் அது மரணமா’ போன்ற  வாசகங்களைக்  கையில் ஏந்தி, கண்ணீர் மல்க தமது போராட்டத்தினை மேற்கொண்டனர்.

வவுனியா காணாமல் ஆக்கப்பட்டடோரின் உறவுகள், 884 ஆவது நாட்களாக தமது தொடர் போராட்டத்தினை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Print Friendly, PDF & Email