SHARE

பிரித்தானிய பாராளுமன்றில் ரமேஷ்கரன் தெரிவிப்பு

இறுதி யுத்தத்தின் போது இலங்கை இராணுவத்தினரால் பிடித்து செல்லப்பட்ட தனது சகோதரன் தொடர்பில் இதுவரை எந்த தகவலும் தெரியாது என சாட்சியமளித்த ரமேஷ்கரன் மாணிக்கம் இலங்கை அரசிற்கு எதிராக சர்வதேச ரீதியில் வழக்குகள் தொடரவும் சாட்சியங்கள் அளிக்கவும் தயாராக உள்ளதாக என தெரிவித்தார்.

காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளுக்கான நீதி கோரியும் தமிழ் மக்கள் மீதான இனப்படுகொலைக்கு இலங்கை அரசின் பொறுப்புக்கூறலை வலியுறுத்தக்கோரியும் பிரித்தானிய பாராளுமன்றில் இன்று நடைபெற்ற காணாமல் ஆக்கப்பட்டோருக்கான அனைத்துலக நாள் மாநாட்டில் கலந்து கொண்டு சாட்சியம் அளித்த போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்,

இலங்கையில் நடைபெற்ற இறுதி யுத்தத்தின் போது எனது சகோதரன் சிறிலங்கா படையினரால் கைது செய்யப்பட்டு கொண்டுசெல்லப்பாட்டார். அதன் பின்னர் அவர் தொடர்பில் இதுவரையில் நாங்கள் எந்த தகவலையும் பெறமுடியாது உள்ளோம். இலங்கை அரசு எம்மை தொடர்ந்து எமாற்றி வருகின்றது. காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான அலுவலகம் மீதும் எமக்கு நம்பிக்கை இல்லை. அது சர்வதேசத்துக்கான இலங்கை அரசாங்கத்தின் கண்துடைப்பே.

எனவே இலங்கை அரசு எனது சகோதரன் தொடர்பில் பதில் தரும் வரை நான் எங்கு வேண்டுமானாலும் அரசுக்கு எதிராக சாட்சியமளிக்கவோ வழக்கு தொடரவோ தயாரகா உள்ளேன். காணாமல் ஆக்கப்பட்டோர் விடயத்தில் இழுத்தடிப்பு செய்யும் அவர்கள் சர்வதேச குற்றவியல் நீதிமன்றில் நிறுத்தப்படவேண்டும் என அவர் தெரிவித்தார்.

அங்கு அவர் அளித்த சாட்சியத்தின் ஒருபகுதி பின்வருமாறு ,

Print Friendly, PDF & Email