SHARE

தென்மராட்சி மட்டுவில் சந்திரபுரம் பகுதியிலுள்ள வீடொன்றில் நுழைந்து வாள்வெட்டுக் குழு ஒன்று அட்டகாசத்தில் ஈடுபட்டுள்ளது.

இன்று(வெள்ளிக்கிழமை) அதிகாலை குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக ஆதவனின் பிராந்திய செய்தியாளர் குறிப்பிட்டார்.

இதன்போது குறித்த வீட்டிற்குள் நுழைந்த நான்கு பேரடங்கிய குழு, வீட்டின் நுழைவாயில், வீட்டின் முன்பாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மேட்டார் சைக்கிள் உட்பட வீட்டின் ஐன்னல் கண்ணாடிகளையும் அடித்து நொருக்கியுள்ளது.

இதனையடுத்து வீட்டில் இருந்தவர்கள் கூக்குரல் எழுப்பியதனையடுத்து குறித்த ஆயுதக் கும்பல் தப்பித்துச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த விடயம் தொடர்பாக பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ள நிலையில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

Print Friendly, PDF & Email