SHARE

மாவீரர் தினத்திற்கு தான் தடை விதிக்கப்போவதாக சொல்லவில்லையென ஜனாதிபதி வேட்பாளர்கோட்டபாய தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணத்தில் இருந்து வெளிவரும் ‘உதயன்’ என்ற செய்தி நாளிதழ் – போரின் போது இறந்த விடுதலைப் புலிகளின் போராளிகளை நினைவுகூர நான் ஒருபோதும் அனுமதிக்கப் போவதில்லை என்று, பெயர் குறிப்பிடாத ஒரு வெளிநாட்டு ஊடகத்திற்கு நான் தெரிவித்ததாக இன்று தலைப்புச் செய்தி வெளியிட்டுள்ளது. அது ஒரு பொய்யான – இட்டுக்கட்டப்பட்ட செய்தியாகும்.

அவ்வாறான எந்த ஒரு கருத்தையும் நான் எந்த ஒரு ஊடகத்திற்கும் தெரிவித்திருக்கவில்லை.நாட்டினதும், நாட்டின் அனைத்து குடிமக்களதும் எதிர்காலத்தை தீர்மானிக்கின்ற ஒரு தீர்க்கமான தேர்தலுக்கு முன்னதாக – தமிழ் மக்களின் உணர்வுகளைப் பாதித்து, அவர்களைத் தவறாக வழிநடத்துவதற்காக இந்த பத்திரிகை, இவ்வாறான பொய்யான செய்தியை வேண்டுமென்றே விசமத்தனமாக வெளியிட்டுள்ளதென கோட்டபாய தெரிவித்துள்ளார்.

Print Friendly, PDF & Email