SHARE

தேசத்தை
இனத்தை மீட்க வந்த
இறைவா
வருவாய் அருள் தருவாய்
எம் தலைவா..!

உன்னை படைத்த இயற்கை கூட
கடவுளாக பார்க்கும்
அற்புதமான மானிடப் பிறப்பு..!

எதிரிகள் துரோகிகள் கூட
விரும்பும் மகத்தான மனிதன்
எல்லோரும் போற்றும்
மனித குலத்தில் வந்து உதித்த
மாவீரன்..!

எத்தனை பேர்
ஏமாற்றிய போதும்
சோர்ந்து விடாது
எவரையும் ஏமாற்றாது
நேர்மையின் வழி நடந்து
உத்தமன்..!

உண்மையின் அறம்
எம்மை உயிர்பிக்கும் நினைவு..
உன் கைகளுக்குள்
தேசம் இருந்த வரை தன்மானம் பெண்மானம்
கெளரவம் வீரம் கொட்டிக் கிடந்தது
அப்போ எல்லாம் அழகாகத்தான் இருந்தது..!

இந்த உலகத்திற்கே பிடித்தமான
தமிழ் தலைவன்..!
நாற்றிசையெங்கும்
நாவில் தவழும் ஒரு பெயர் என்றால்
பிரபாகரன்…!

முப்படைகளையும் உருவாக்கிய
முதல் தமிழ் புலி
வல்லரசையும் ஆட்டம் காண வைத்த
வல்லமையாளன்…

உலக வரலாற்றில்
பெண்களை களம் காண வைத்து
பெண்களுக்கான தனித்துவமான
ஆளுமைகளை தந்து கண்ணியம் தவறாது
பெண் விடுதலைக்கான தளத்தை
உருவாக்கி வெற்றிப் பெருமிதத்தை தந்த
தாய் புலி நம் தலைவன்..!

மாசில்லாத மகராசன்
தமிழ் இனத்தை காக்க பிறந்த கடவுள்..
நானிலம் போற்ற நன்மைகள் செய்ய பிறந்தவனே
வருவாய் அருள் தருவாயென காத்து கிடக்கிறதைய்யா உன்னை நேசித்த மனங்களெல்லாம்..!

சுயநலமே இல்லாத
பெரும் மனம் படைத்த
மனித நேயத்தை மிஞ்சிய தூயவன்..
எல்லோரும் வணங்கும் சுடரொளி..!

இந்த உலகமே நம் தலைவன் தான் என்று
வாழ்ந்த உங்கள் பிள்ளைகள் ஏங்கி தவித்து
வாடி நிற்கின்றனர்
நமகெல்லாம் முகவரி தந்த
மாணிக்க தந்தையே
பார்வதி தாய் வயிற்றில் வந்து உதித்த கதிரவனே
தமிழ் ஒளியே
தமிழினம் வாழ ஈழ மண்ணில் பூத்தவரே
வருவாய் அருள் தருவாய் தினம் தமிழ் மகனே…!

என்றுமே எம்முடன் வாழும்
உயிர் சுவாசம் வாழ்க.!

எம் குலம் காத்த சாமியே வாழ்க!
தமிழ் வாழும் வரை உன் புகழ் நாமம் வாழும் சிறக்கும்..!

-சந்திரிகா-                
Print Friendly, PDF & Email