SHARE

வெளிநாட்டு மற்றும் பொதுநலவாய அலுவலகத்திடம் தமிழ் அமைப்புக்கள் கூட்டு கோரிக்கை

பிரிட்டனின் கூலிப்படைகளினால் தமிழ் மக்களுக்கு எதிராக நிகழ்த்தப்பட்ட குற்றச்செயல்கள் குறித்து விசாரணை செய்யப்படவேண்டும் என வெளிநாட்டு மற்றும் பொதுநலவாய அலுவலகத்திடம் புலம்பெயர் தமிழ் அமைப்புகள் ஒன்றாக கோரிக்கை விடுத்துள்ளன.

புலனாய்வு ஊடகவியலாளர் பில் மில்லர் எழுதியுள்ள ‘கீனி மீனி’ எனும் நூலில் பிரிட்டனின் தனியார் நிறுவனமான கீனி மீனி சேர்விஸ், இலங்கை தமிழர்களுக்கு எதிராக படுகொலைகளில் ஈடுபட்டுள்ளது என ஆவணங்களை வெளிட்டுள்ள நிலையிலேயே அதிர்ச்சிக்குள்ளாகியுள்ள புலம்பெயர் தமிழ் அமைப்புகள் மேற்படி இவ்வாறு கோரிக்கை விடுத்துள்ளன.

Print Friendly, PDF & Email