SHARE

தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் விஞ்ஞாபனம் இன்று (ஞாயிற்றுக்கிழமை) வெளியிடப்பட்டது

தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் மாபெரும் பிரசார கூட்டம் வவுனியா நகரசபை காலாசார மண்டபத்தில் இன்று காலை ஆரம்பமாகி இடம்பெற்று வருகின்றது.

ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் மத்திய குழு உறுப்பினர் கே.அருந்தவராயா தலைமையில் இடம்பெற்றுவரும் இந்நிகழ்வில் முதன்மை அதிதியாக கூட்டணியின் தலைவர் சி.வி.விக்னேஸ்வரன் கலந்துகொண்டார்.

வவுனியா நகரசபை வாயிலில் இருந்து மங்களவாத்தியம் முழங்க, விருந்தினர்கள் ஊர்வலமாக அழைத்துவரப்பட்டதுடன் மங்கள விளக்கேற்றலுடன் நிகழ்வு ஆரம்பமாகியது.

இதன்போது  முன்னாள் நீதி அரசரும், கூட்டணியின் தலைவருமான சி.வி.விக்னேஸ்வரன் தேர்தல் விஞ்ஞாபனத்தை  வெளியிட்டு வைத்தார். அதனை  அக்கட்சியின் உப.தலைவரான சுரேஸ் பிரேமசந்திரன் பெற்றுக்கொண்டார்.

இந்த நிகழ்வில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களான க.சுரேஸ் பிரேமசந்திரன், சிவசக்தி ஆனந்தன், தமிழ்மக்கள் சுயாட்சிக்கழகத்தின் தலைவி அனந்தி சசிதரன், முன்னாள் மாகாண அமைச்சர் ஞா.குணசீலன் மற்றும் வன்னி மாவட்டத்தில் போட்டியிடும் வேட்பாளர்கள் மற்றும் பெருமளவான மக்கள் கலந்துகொண்டனர்.

Print Friendly, PDF & Email