SHARE

கொரோனா வைரஸிலிருந்து மக்களை மீட்பதற்கான வேண்டுதல், பால்குட பவனி மற்றும் மகாசுதர்சன யாகம் யாழ். வடமராட்சி வல்லிபுர ஆழ்வார் ஆலயத்தில் இன்று (28) காலை 10 மணியளவில் இடம்பெற்றது.

ஆலய பிரதம குரு தலைமையில் இடம்பெற்ற இந்த யாகம், உலகில் இடர்கள் வருகின்ற போது இடர்களிலிருந்து மக்களை காக்கவேண்டியும்  கிருஸ்ண பகவானின்  ஆசி வேண்டியும் இடம் பெற்றது.

முன்னதாக காலை 6 மணியளவில் பருத்தித்துறை கோட்டு வாசல் அம்மன் கோவிலிலிருந்து மந்திகை ஊடாக வல்லிபுர ஆழ்வார் ஆலயத்துக்கு 108  பால் குடங்கள் பவனியாகக் கொண்டுவரப்பட்டு, மாகா சுதர்சன் யாகம் வரல்லிபுர ஆழ்வார் ஆலயத்தில் இடம்பெற்றது.

Print Friendly, PDF & Email