SHARE

சுட்டுப்டுகொலை செய்யப்பட்ட நமது ஈழநாடு பத்திரிகையின் ஊடகவியலாளர் சகாதேவன் நிலக்சனின் 13 ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு இன்றைய தினம் (சனிக்கிழமை) யாழ். ஊடக மையத்தில் உணர்வுபூர்வமாக நினைவுகூறப்பட்டது.

யாழ்.பல்கலைகழக ஊடக வளங்கள் பயிற்சி மையத்தின் ஊடக கற்கை மாணவனும்இ சாரளம் சஞ்சிகையின் ஆசிரியரும்இ நமது ஈழநாட்டின் பகுதிநேர ஊடகவியலாளரும் மற்றும் யாழ். மாணவர் பேரவையின் முன்னாள் தலைவருமான சகாதேவன் நிலக்சன் கடந்த 2007 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 01 ஆம் திகதி அவரது வீட்டில் வைத்து சுட்டுக்கொல்லப்பட்டார்.

அவரது வீட்டிற்கு அதிகாலை-05 மணியளவில் சென்ற ஆயுததாரிகள் நிலக்சனை வெளியே அழைத்து அவரது பெற்றோர்கள் முன்னிலையில் சுட்டுப் படுகொலை செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Print Friendly, PDF & Email