SHARE

பத்து வருடங்களாகியும் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளின் வருகையை எதிர்பார்த்து 72 இற்கும் அதிகமானவர்கள் மரணித்துள்ள நிலையிலும் தமக்கான தீர்வு வழங்கப்படவில்லை என அம்பாறை மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்க இணைப்பாளர் தம்பிராசா செல்வராணி தெரிவித்துள்ளார்.

அம்பாறை, கல்முனையில் இன்று (சனிக்கிழமை) இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், “உயிருடன் ஒப்படைக்கப்பட்ட எமது உறவுகளுக்கு என்ன நடந்தது என்பதை சர்வதேசம் எங்களுக்கு தெளிவுபடுத்த வேண்டும்.

வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் நாளை போராட்டம் ஒன்றினை வடக்கு கிழக்கில் மேற்கொள்ளவுள்ளனர்.

வடக்கு கிழக்கு மாகாணங்களில் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளின் இப்போராட்டத்தை குழப்புவதற்காக சில தரப்பினர் முயற்சிக்கிறார்கள்.

அம்பாறையில் பத்து வருடங்களாக நாங்கள் செயற்பட்டுவரும் நிலையில் இடம்பெறவுள்ள போராட்டத்தில் தங்களது பிள்ளைகள், தங்களது உறவுகளை இழந்தவர்கள் அனைவரும் பங்கேற்குமாறு கேட்டுக்கொள்கிறோம்” என அவர் குறிப்பிட்டுள்ளார்.

Print Friendly, PDF & Email