SHARE

ஹெரோயினுடன் கைது செய்யப்பட்டு களுத்துறை சிறையில் அடைக்கப்பட்டிருந்த பெண் கைதி ஒருவர் தப்பியோடிய நிலையில் அவரை பொலிஸார் மடக்கிப் பிடித்துள்ளார்.

களுத்துறை, பமுணுகம பிரதேசத்தில் ஆயிரத்து 300 மில்லிக் கிராம் ஹெரோயினுடன் கைது செய்யப்பட்ட குறித்த பெண், நீதிமன்ற நடவடிக்கையையடுத்து வெலிக்கடைச் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்தார்.

இந்நிலையில் அவர், நேற்று (08) மாலை சிறையின் கூரையைப் பிரித்துக்கொண்டு தப்பிச் சென்றுள்ளார்.

இதையடுத்து பொலிஸார் மேற்கொண்ட நடவடிக்கையைத் தொடர்ந்து குறித்த கைதி, ஹொரண பிரதேசத்தில் வைத்துக் கைது செய்யப்பட்டுள்ளார்.

Print Friendly, PDF & Email