SHARE

தடையை மீறி தியாக தீபம் திலீபனின் நினைவு தினத்தை கொண்டாடிய முன்னாள் நாடாளுமன்ற – வடமாகாண சபை உறுப்பினர் எம்.கே. சிவாஜிலிங்கம் இன்று காலை யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றத்துக்கு அழைத்துவரப்பட்டார்
.
இந்திய-இலங்கை அரசுகளிடம் நீதிகோரி ஐந்து அம்சக் கோரிக்கைகளை முன்வைத்து உணவு ஒறுப்பு போராட்டத்தில் உயிர் நீத்த தியாக தீபம் திலீபனின் 33 ஆவது நினைவு தினம், நேற்று பல தடைகளையும் தாண்டி முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சிவாஜிலிங்கத்தினால் நினைவுகூரப்பட்டது.

தியாகதீபம் திலீபனின் நினைவுதினத்தில் நிகழ்வுகளை நடத்த தடை உத்தரவுகளை பொலிஸார் நீதிமன்றத்தின் ஊடாக பெற்றிருந்தனர்.

இந்நிலையில், தியாக தீபம் திலீபனின் நினைவிடம்,யாழ். பல்கலைக்கழகம் போன்ற பகுதிகளில் பொலிஸார் குவிக்கப்பட்டு பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் திலீபனின் நினைவு தினம் தடுக்கப்பட்டு வந்தது.

இந்நிலையில் தடையை மீறி தியாக தீபம் திலீபனின் நினைவு தினத்தை சிவாஜிலிங்கம் அனுஸ்டித்தார்.இதானல் நேற்று (15) கோப்பாய் பொலிஸாரால் கைது செய்யப்பட்டிருந்தார். இன்று நீதிமன்றுக்கு அழைத்து வரப்பட்டுள்ளார்.

Print Friendly, PDF & Email