SHARE

வடமாகாணத்தில் முதல்முறையாக ஒரு கை துண்டப்பட்ட நிலையில் கடந்த 23ஆம் திகதியன்று யாழ். போதனா வைத்தியசாலைக்கு கொண்டுவரப்பட்ட நபர்க்கு தற்போது முழுமையான சிகிச்சைகள் அளிக்கப்பட்டு மீண்டும் வழமைக்கு திரும்பியுள்ளார்.

இதுகுறித்துக் கருத்துத் தெரிவித்த யாழ். போதனா வைத்தியசாலையின் பணிப்பாளா வைத்தியர் த.சத்தியமூர்த்தி,

“யாழ். போதனா வைத்தியசாலையின் பிளாஸ்டிக் சத்திரசிகிச்சை நிபுணர் வைத்தியர் இளஞ்செழியன் பல்லவன் தலைமையிலான குழுவினர் முழுமையான பங்களிப்பினை வழங்கியதற்கு பாராட்டுகள்.

யாழ். போதனா வைத்தியசாலையில் குறித்த பிளாஸ்டி சத்திரசிகிச்சை மேற்கொண்ட விதம் தொடர்பாக ஊடகங்களுக்கு இன்று (30) யாழ். போதனாவைத்தியசாலையில் வைத்து கருத்து தெரிவிக்கும் போதே த.சத்தியமூர்த்தி இதனைத் தெரிவித்துள்ளார்.

அத்துடன், பொதுமக்கள் கைகள், கால்கள் துண்டாகுதல் தொடர்பாக விழிப்புணர்வு அடையவேண்டும். மேலும் அளவுக்கு மேலாக வாள்வெட்டுச் சம்பவங்கள் இடம்பெற்றாலும் இவ்வாறான சிகிச்சைகள் வழங்கமுடியாது போகக்கூடும். எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

Print Friendly, PDF & Email