SHARE

யாழ். புங்குடுதீவு – ஊரதீவு சிவன் ஆலய குளக்கரையில் பூசகர் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.

குறித்த பூசகரின் சடலம் இன்று (03) அதிகாலை மீட்கப்பட்டுள்ளது.

சடலமாக மீட்கப்பட்டவர் புங்குடுதீவு ஊரதீவு சிவன் கோவிலின் பூசகரான ரூபன் சர்மா (வயது-33) என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

பூசகரின் உதவியாளரைக் கட்டிவைத்துவிட்டு குறித்த பூசகர் அடித்துக் கொல்லப்பட்டுள்ளார் எனவும், எனினும் உதவியாளருக்கும் குறித்த கொலையில் தொடர்பிருக்கலாம் என்ற சந்தேசத்தில் ஆவர் பொலிஸ் காவலில் வைக்கப்பட்டள்ளார் எனவும் ஊர்காவற்றுறை பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த சம்பவம் தொடர்பில் ஊர்காவற்றுறை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Print Friendly, PDF & Email