SHARE

மொனராகலை – மெதகமயில் சுய தனிமைப்படுத்தலில் இருந்த 70 வயது முதியவர் ஒருவர் நேற்று (08) இரவு உயிரிழந்துள்ளார்.

கொரோனா தொற்றுடைய பெண் ஒருவர் பயணித்த பேருந்தில் உயிரிழந்தவரின் மகளும் பயணித்த நிலையில் அவரது குடும்பத்தினர் தனிமைப்படுத்தப்பட்டிருந்தார். இந்நிலையிலேயே குறித்த முதியவர் உயிரிழந்துள்ளார்.

மன்னார் பட்டித்தோட்டம் பகுதிக்கு வந்து கட்டிட பணியில் ஈடுபட்ட நபர் ஒருவர் மீது மேற்கொள்ளப்பட்ட சீ.பி.ஆர் பரிசோதனையின் போது குறித்த நபர் கொரோனா தொற்றிற்கு உள்ளாகியுள்ளமை உறுதி படுத்தப்பட்டுள்ள நிலையில் மன்னார் மாவட்டத்தில் இருந்து செல்லுகின்ற அணைத்து தனியார்,அரச பேரூந்து சேவைகளும் இடை நிறுத்தப்பட்டுள்ளது என மன்னார் மாவட்ட பதில் அரசாங்க அதிபர் எஸ்.குணபாலன் தெரிவித்தார்.

இன்று வெள்ளிக்கிழமை(9) காலை மன்னார் மாவட்டச் செயலகத்தில் இடம் பெற்ற ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் அவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

வெண்ணப்புவ பகுதியில் இருந்து மன்னார் பட்டித்தோட்டம் பகுதிக்கு வந்து கட்டிட பணியில் ஈடுபட்ட நபர் ஒருவர் மீது மேற்கொள்ளப்பட்ட சீ.பி.ஆர் பரிசோதனையின் போது குறித்த நபர் கொரோனா தொற்றிற்கு உள்ளாகியுள்ளமை உறுதி படுத்தப்பட்டுள்ளது.

அதற்கு அமைவாக அந்த பிரதேசம் தனிமைப்படுத்தப்பட்டுள்ளது. மேலும் குறித்த பிரதேசத்தை அன்டிய பகுதியிலும் பீ.சி.ஆர். பிரிசோதனைகள் முன்னெடுக்கப்பட உள்ளது.
மேலும் மன்னார் மாவட்டத்தில் இருந்து செல்லுகின்ற அணைத்து தனியார்,அரச பேரூந்து சேவைகளும் இடை நிறுத்தப்பட்டுள்ளது.மேலும் இந்த பிரதேசங்களில் இயங்குகின்ற அலுவலகங்களில் குறைந்த அளவு பணியாளர்கள் கடமையில் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.

மேலும் பொது மக்களுக்கான சேவைகள் இன்றைய தினமும்,எதிர் வரும் சில தினங்களுக்கும் இடை நிறுத்தப்பட்டுள்ளது. பொதுமக்கள் தமது போக்கு வரத்து நடவடிக்கைகளை மட்டுப்படுத்திக் கொள்ள வேண்டும் என அவர் மேலும் தெரிவித்தார்.

Print Friendly, PDF & Email