SHARE

பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் உள்ள இலங்கை சரக்கு செயற்பாட்டுப் பிரிவில் உள்ள ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விமான நிறுவனத்தின் ஊழியருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

குறித்த ஊழியருக்கு, இன்று (திங்கட்கிழமை) காலை கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், அங்கு பணியாற்றிவரும் 50 ஊழியர்களுக்கு PCR பரிசோதனைகள் மேற்கொள்ளப்படவுள்ளதாக நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.

Print Friendly, PDF & Email