SHARE

முல்லைத்தீவில் மரக்கடத்தல் கும்பலால் ஊடகவியலாளர்கள் தாக்கப்பட்டமை தொடர்பாக இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை.சேனாதிராஜா கண்டனம் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக இன்று (செவ்வாய்க்கிழமை) அறிக்கையொன்றை வெளியிட்டுள்ள அவர்,   நாட்டில் இடம்பெறும் கொள்ளை முயற்சிகளைத் தடைசெய்வதுடன், ஊடகவியலாளர்களினதும் ஊடகத் துறையினதும் பாதுகாப்பை உறுதிப்படுத்த அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.

மேலும், பாதிக்கப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு நிவாரணமும் இழப்பீடும் வழங்கப்பட வேண்டுமென அவர் அரசாங்கத்திடம் கேட்டுக்கொண்டுள்ளார்.

Print Friendly, PDF & Email