SHARE

கிளிநொச்சி இரணைமடு குளத்தின் நீர்மட்டம் 26 அடியை தாண்டியது. கிளிநொச்சி மாவட்டத்தில் தொடர்ச்சியாக பெய்து வந்த பலத்த மழை காரணமாக நீர் நிலைகளிற்கான நீர் வருகை அதிகரித்திருந்தது. இந்த நிலையில் இன்று காலை 9 மணியளவில் இரணைமடு குளத்தின் நீர் மட்டம் 26 அடி 1 அங்குலமாக உயர்ந்துள்ளது.

36 அடி கொண்ட இரணைமடு குளத்திற்கான நீர்வருகை தற்போது குறைந்துள்ளதாகவும், தொடர்ந்து கிடைக்கப்பெறும் மழைவீழ்ச்சியின்போது நீர்வருகை அதிகரிக்கலாம் எனவும் நீர்பாசன திணைக்களம் தெரிவிக்கின்றது.

இதேவேளை 26′ அடி வான் உயரம் கொண்ட கல்மடு குளம் 22′ – 03″ அடியாகவும்,’12’ அடி வான் உயரம் கொண்ட பிரமந்தனாறு குளம் 08′ – 03″ அடியாகவும்உயர்ந்துள்ளது.

Print Friendly, PDF & Email