கொழும்பு சென்று திரும்பியவர்கள்!
கிளிநொச்சி, பூநகரி – பள்ளிக்குடா கிராமத்தில் இருவருக்கும், யாழ்ப்பாணம் அளவெட்டியைச் சேர்ந்த ஒருவருக்கும் கொரோனா தொற்று உறுதிசெய்யப்பபட்டுள்ளது.
கிளிநொச்சி, பூநகரிப் பிரதேசத்தை சேர்ந்த ஒன்பது பேரும் , பளை மற்றும் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த தலா ஒருவருமாக பதினொரு பேர் வெளிநாடு செல்வதற்காக கொழும்புக்குச் சென்று தங்கியிருந்தபோது அவர்களுக்கு பிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
எனினும், பிசிஆர் முடிவுகள் வெளிவர முன்னர் குறித்த இளைஞர்கள் வான் ஒன்றில் கொழும்பிலிருந்து சொந்த ஊர்களுக்குத் திரும்பியிருக்கின்றனர். இந்த நிலையில் அவர்களில் யாழ்ப்பாணம் அளவெட்டியைச் சேர்ந்த ஒருவருக்கும், கிளிநொச்சி பூநகரி பள்ளிக்குடாவைச் சேர்ந்த இருவருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
அத்துடன், குறித்த வானில் பயணித்த ஏனையவர்கள் மற்றும் அவர்களின் குடும்பங்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.