SHARE

யாழ்ப்பாணம் நிலாவரை கிணறு அருகாமையில் தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளால் அகழ்வுப் பணி முன்னெடுக்கப்பட்டது.

இன்று முற்பகல் நிலாவரைக் கிணறு பகுதிக்கு சென்ற தொல்பொருள் திணைக்கள அதிகாரிகள், மரம் ஒன்றின் கீழ் அகழ்வு நடவடிகையை முன்னெடுத்து ஆய்வுப் பணிகளை மேற்கொண்டுள்ளனர்.

சம்பவ இடத்துக்கு விரைந்த வலி.கிழக்கு பிரதேச சபையின் தவிசாளர் தியாகராஜா நிரோஷ் மற்றும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் கே.சிவாஜிலிங்கம் உள்ளிட்டோர் தடுத்து நிறுத்தியதுடன் அது தொடர்பில் அதிகாரிகளிடம் கலந்துரையாடினார்.

அப்போது அவர்கள் ‘இங்கு கட்டடம் ஒன்று இருந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது. அதுதொடர்பில் ஆய்வுகளை நடத்தத் திட்டமிட்டுள்ளோம்’ என தெரிவித்துள்ளனர். ஆய்வுப் பணிக்கான செலவு மதிப்பீட்டை தயாரிப்பதற்கான பணி இன்று முன்னெடுக்கப்பட்டது. செலவீட்டுக்கு அனுமதி கிடைத்ததும் அகழ்வுப் பணி முன்னெடுக்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

ஆனாலும் மக்கள் மற்றும் மக்கள் பிரதிநிதிகளினதும் கடும் எதிர்ப்பினால் அவர்களது முயற்சி தற்காலிகமாக தடுத்து நிறுத்தப்பட்டது.

Print Friendly, PDF & Email