SHARE

யாழ்ப்பாணத்தை சேர்ந்தவரும் புத்தளத்தை தற்காலிக வசிப்பிடமாகக் கொண்ட வயோதிபரான இ.லோறன்ஸ் என்பவர் கடந்த 11.01.2021 ஆம் திகதி யாழ்ப்பாணத்தில் அவரது வீட்டில் இருந்தவேளை இனந்தெரியாதோரால் தாக்கப்பட்டுள்ளார்.

இச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது சம்பவ தினத்தன்று அவரது வீட்டிற்குச் சென்ற இனந்தெரியாத இருவர் புலனாய்வுப்பிரிவினர் எனத் தங்களை அறிமுகப்படுத்தி லண்டன் சென்றுள்ள அவரது மகளான கிரிஸ்டி நிலானி என்பவரின் செயற்பாடுகள் மற்றும் அவர் திரும்ப இலங்கை வர இருப்பது தொடர்பிலும் விசாரித்துள்ளனர்.

வயோதிபர் தகவல் வழங்க மறுக்கவே மேற்படி தாக்குதல் சம்பவம் இடம்பெற்றுள்ளது. மேலும் அவரது வீட்டினையும் சோதனையிட்டு அங்கிருந்த அவரின் அடையாள அட்டை, கணனி மற்றும் ஆவணங்கள் அவர்களால் எடுத்துச்செல்லப்பட்டதாகவும் வயோதிபர் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இது தொடர்பில் கடந்த 15 ஆம் திகதி மனித உரிமை ஆணைக்குழுவில் முறையிடப்பட்டுள்ளது.

Print Friendly, PDF & Email