SHARE

நாட்டில் தமிழர்களின் இருப்பு இன்று கேள்விக்கு உள்ளாக்கப்பட்டுள்ளதுடன், வடக்கு கிழக்கு தாயகப் பகுதிகளில் தமிழரின் வாழ்விடங்கள் அழிக்கப்பட்டு வருவதாக ஈ.பி.ஆர்.எல்.எப். கட்சியின் தலைவர் சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

கிளிநொச்சியில், காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களால் ஏற்பாடு செய்யப்பட்ட போராட்டத்தில் கலந்துகொண்டு ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இந்நிலையில், நாட்டிலிருந்து தமிழ் மக்கள் ஒட்டுமொத்தமாக விரட்டப்படக் கூடிய ஒரு சூழல் உருவாகிக் கொண்டிருக்கிறது என அவர் கூறியுள்ளார்.

எனவே, பொத்துவில் முதல் பொலிகண்டி வரையான பேரெழுச்சிப் பேரணியில் அனைவரும் இணைந்துகொள்ள வேண்டுமென அவர் அழைப்பு விடுத்துள்ளார்.

Print Friendly, PDF & Email