SHARE

இலங்கையின் சுதந்திர தினம் தமிழர்களின் கரி நாள் என்பதை உலகிற்கு காட்டுவதற்காக இலங்கையில் சிறுபான்மையினருக்கு எதிராக இழைக்கப்பட்ட அநீதிகளை சித்தரிக்கும் துண்டுபிரசுரங்கள் பிரித்தானியாவில் தமிழ் இளையோரால் இன்று பல்வேறு இடங்களில் ஒட்டப்பட்டன.

73 ஆவது சுதந்திர தினத்தை இலங்கை அரசாங்கம் இன்று கொண்டாடிக்கொண்டிருக்கும் நிலையில் தமிழர்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிக்கு நீதி கோரியும் இலங்கையின் சுதந்திர தினம் தமிழர்களுக்கு ஒரு கரி நாள் என்பதையும் எடுத்துக்கூறி அங்கு நடைபெற்ற மனிதவுரிமை மீறல்களை பன்னாட்டு சமூகத்தவர்க்கும் எடுத்து செல்ல வேண்டும் என்ற நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் கோரிக்கைக்கு வலுசேர்க்கும் வகையில் அதன் செயற்பாட்டாளர்களால் இது முன்னெடுக்கப்பட்டது.

செயற்பாட்டாளரான கௌசிகன் தலைமையிலான குழுவின் பிரித்தானியாவின் பல்வேறு பகுதிகளிலும் பிரச்சாரங்களில் ஈடுபடுவதை கீழுள்ள படங்களில் காணலாம்.

Print Friendly, PDF & Email