வெத்திலைக்கேணியில் சம்பவம்
இராணுவப்புலனாய்வாளர்களினால் மூர்க்கத்தனமாக தாக்கப்பட்டுள்ள தமிழ் இளைஞர் ஒருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
நேற்று மாலை தனது வேலைத்தளத்திலிருந்து வீடு திரும்பிக்கொண்டிருந்த இளைஞனை வெத்திலைக்கேணியிலுள்ள அவரது வீட்டிற்கு அண்மையில் வழிமறித்த இலங்கையின் இராணுவப்புலனாய்வாளர்கள் இளைஞனிடம் எங்கிருந்து வருகின்றாய் எங்கு செல்கின்றாய் என கேள்வி எழுப்பியுள்ளனர். அதற்கு குறித்த இளைஞன் ஏன் எதற்கு கேட்கிறீர்கள் என கேள்வி எழுப்பியுள்ளார்.
உடனே உன்னை விசாரணைசெய்யவேண்டும் என அருகிலுள்ள கல்லறைக்கு (சேமக்காலைக்கு) இழுத்துச்சென்ற புலனாய்வாளர்கள் இளைஞனை சரமாரியாக தாக்கியுள்ளனர். பின்னர் அதனைக்கண்ட அயலவர்கள் தெரிவித்த தகவலையடுத்து குறித்த இடத்துக்கு விரைந்த இளைஞனின் தாய் அவரை அங்கிருந்து மீட்டு வைத்தியசாலையில் அனுமதித்துள்ளார்.