SHARE

இலங்கையில் யுத்தத்தில் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் இனப்படுகொலைக்கு உள்ளான தமிழ் மக்கள் சார்பில் நீதி கோரி தன்னை உருக்கும் தியாகம் திருமதி அம்பிகை செல்வக்குமார் பிரித்தானியாவின் மௌனம் கலைக்க உண்ண மறுத்து இன்றுடன் 11 ஆவது நாளை எட்டியுள்ளது.

இனப்படுகொலையாளர்களை காப்பாற்ற சர்வதேச விசாரணையை நிராகரித்து தொடர்ந்தும் இன அழிப்பை மேற்கொண்டு வரும் இலங்கை அரசிற்கு, மேலும் இன்னுமொரு கால அவகாசத்தை வழங்குவதை சர்வதேச நாடுகள் நிறுத்துவதோடு, இலங்கையை குற்றவியல் நீதிமன்றில் நிறுத்தி தமிழர்களுக்கான நீதியை பெற்றுத்தரும்படி ஒட்டுமொத்த தமிழினத்தின் ஒற்றைக்குராலாய் பசித்திருந்து நீரை மட்டும் அருந்தி, அம்பிகை நீதிக்காய் போராடி வருகின்றார்.

உண்ணாமல் இரு வாராங்களை அண்மித்துக்கொண்டிருக்கும் அவரின்; உடல் நிலை மிகவும் மோசமடைந்துள்ளது என மருத்துவர்கள் அறிவித்துள்ள போதிலும் கோரிக்கை நிறைவேறும்வரை தனது போராட்டத்தில் உறுதியாக இருக்கும் அவர் அகிம்சை வழியில் உயிர் தியாகிகளான திலீபன், அன்னை பூபதி ஆகியோரை வணங்கி அவர் இன்றைய 11 ஆவது நாளினை தொடர்ந்துள்ளார்.

இந்நிலையில் அம்பிகையின் போராட்டத்திற்கு வலுச்சேர்க்கும் வகையில் நடைபெறும் மெய்நிகர் நிழகழ்வு வழமைபோல் இன்று பிரித்தானிய நேரம் பி.ப. 3 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது. அந்டதவகையில் மும்மத தலைவர்களின் ஆசியுரைகளுடன் ஆரம்பமாகவுள்ள இன்றைய நிகழ்வில் ஓவியப் பேராசிரியர் புகழேந்தி மற்றும் அரசியல் பிரமுகர்கள் ஆதரவாளர்கள் என பலர் சிறப்புரைகள் ஆற்றவுள்ளனர்.

இதேவேளை மகளிர் தினத்தை முன்னிலைப்படுத்தி தேனுகா கீத்தார்த்தனன் தொகுத்து வழங்கிய நேற்றைய 10 ஆவது நாள் மெய்நிகர் நிகழ்வில், வணக்கத்துக்குரிய ஸ்ரீமதி. ஸ்ரீகமலேஸ்வரி சசிகுமாரக்குருக்கள், அருட்சகோதரி ரேகா வலிசாயி, ஜொலினிராஜி ஸ்ரான்லி ஆகிய மதத்த தலைவிகளின் ஆசியுரைகள் முதலில் இடம்பெற்றது. தொடர்ந்து கொளரவ திருமதி. நாகேஸ் நரேந்திரா (கவுண்சிலர், லேபர் கட்சி, கரோ, இலண்டன்), கொளரவ திருமதி. அனந்தி சசிதரன் (முன்னாள் அமைச்சர், வட மாகாணசபை) , திருமதி. லீலாவதி ஆனந்தராஜா (வடக்கு கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் சங்க செயலாளர்), மதிப்பிற்குரிய Margret Own (OBE Senior Barriester, Women for Peace Through Democracy WPD அமைப்பின் தலைவி), வழக்கறிஞர் தமயந்தி தமிழ் நாடு சட்டத்தரணிகள் சங்கத்தலைவி ஆகியோரின் சிறப்புரைகள் இடம்பெற்றதுடன் திருமதி விழியரசியின் சிறப்பு பேச்சும் மருத்துவர் அமுதநிலா காசி ஆனந்தனின் (அவுஸ்ரேலியா) சிறப்பு நடனமும் இடம்பெற்றன.

11 ஆவது நாளாகிய இன்றைய மெய்நிகர் நிகழ்வு வழமை போல் பிரித்தானிய நேரம் மாலை 3 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது. இந்நிகழ்வில் நீங்களும் இணைந்து அம்பிகையின் போராட்டத்திற்கு ஆதரவு சேர்க்க பின்வரும் இணைப்பில் இணைந்துகொள்ளலாம்.

https://us02web.zoom.us/j/86153063444?pwd=U1ZiY1lIVjRtZmNwZUFWNGNzV1k1UT09

Print Friendly, PDF & Email