SHARE

அன்னை அம்பிகையின் உண்ணாவிரத போராட்டம் முடிவுக்கு வந்தது

”எனது போராட்டத்திற்கு வலுச்சேர்க்க கிளர்ந்தெழுந்த இளம் சமூதாயத்தின் உத்வேகம் கண்டு பூரிப்படைகிறேன். தமிழினத்திற்கான எதிர்கால நம்பிக்கைய அவர்கள் ஏற்படுத்திவிட்டார்கள்” என்ற பெருமித வாரத்தைகளுடன் திருமதி அம்பிகை செல்வக்குமார் சற்று முன்னர் தனது உண்ணாவிரதப்போராட்டத்தை முடித்துக்கொண்டார்.

பிரித்தானிய அரசிடம் முன்வைத்த 4 கோரிக்கைகளில் ஒன்றுக்கு மேற்பட்ட கோரிக்கைகள் நிறைவேற்றபட்டுள்ள நிலையில் பிரித்தானியாவில் நேற்று கிளர்ந்தெழுந்த புலம்பெயர் தமிழர்களின் வேண்டுதலாகவும் உலகெமெங்குமுள்ள ஒட்டுமொத்த தமிழினத்தினதும் அமைப்புக்கள் கட்சிகளினதும் வேண்டுகோலையும் ஏற்று அம்பிகையின் உண்ணாவிரதப் போராட்டம் இன்றுடன் முடிவுக்கு வந்தது.

17 ஆவது நாளாகிய இன்று உண்மைக்கு நீதிக்குமான போராட்ட பேரியக்கத்தின் உண்ணாவிரதம் தொடர்பான ஊடக அறிக்கை வாசிக்கப்பட்டதை தொடர்ந்து குருக்களிடமிருந்து பாலும் பழமும் பெற்று உண்டு தனது அகிம்சை வழி உண்ணாவிரதப் போராட்டத்தை திருமதி. அம்பிகை செல்வக்குமார் நிறைவுக்கு கொண்டுவந்தார்.

பிரித்தானிய அரசிடம் 4 அம்சக்கோரிக்கைகளை முன்னிலைப்படுத்தி அவற்றில் ஒன்றையேனும் நிறைவேற்றினால் போராட்டத்தை கைவிடுவேன் என இன்றுடன் 17 நாட்கள் பசித்திருந்த அம்பிகை, கோரிக்கைகளில் ஒன்று முழுமையாவும் இன்னொன்று அண்ணளவாகவும் நிறைவேற்றப்பட்டுள்ள நிலையிலேயே வெற்றியுடன் உண்ணாவிரதத்தை முடித்துக்கொள்ளுமாறு பிரித்தானிய அரசாலும், பாராளுமன்ற உறுப்பினர்களாலும் அனைத்து தமிழ் மக்களாலும் கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

அம்பிகை முன்வைத்த அனைத்துலக சுயாதீன விசாரணை பொறிமுறையை உருவாக்குதல்(IIIM), அனைத்துலக குற்றவியல் நீதிமன்றத்தில் (ICC) விசாரித்தல், சிறிலங்காவுக்கான தனியான அறிக்கையாளரை நியமித்தல், மற்றும் வடக்கு-கிழக்கு மாகாணத்தில் கருத்து கணிப்பு வாக்கெடுப்புக்கான ஐ.நா வின் பரிந்துரைத்தல் ஆகிய நான்கு அம்சக்கோரிக்கைகளில் பிரித்தானியாவின் ஐ.நா.வுக்கான இறுதி வரைபில் ஒரு புதிய விதமான அனைத்துலக சுயாதீன விசாரணைப் பொறிமுறை ஒன்று (IIIM இன் முக்கிய அம்சங்களை உள்ளடக்கிய) உள்ளடக்கப்பட்டுள்ளது.

அத்துடன் நிரந்த ஐ.நா. கண்காணிப்பளருக்கு பதிலாக, தொடர்ச்சியாண கண்காணிப்பு நடைமுறை ஓன்றும் உருவாக்கப்படவுள்ளது.

உண்மைக்கு நீதிக்குமான போராட்ட பேரியக்கத்தின் ஊடக அறிக்கை பின்வருமாறு

Movement-for-Truth-and-Justice-Statement_Final_English

Print Friendly, PDF & Email