SHARE

ஐக்கிய மக்கள் சக்தியின் கம்பஹா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவின் எம்.பி பதவி பலவந்தமாக பறிக்கப்பட்டதாக குற்றஞ்சாட்டி எதிரணியினர் சபைக்குள் எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்டனர்.இதனால் சபையில் கடும் அமளி துமளி ஏற்பட்டது. இதனால் சபை நடவடிக்கைகள் 5 நிமிடங்கள் ஒத்திவைக்கப்பட்டன.

இந்த எதிர்ப்பு நடவடிக்கையின் போது, ஆளும்கட்சியின் உறுப்பினர்களுக்கும் எதிர்க்கட்சி உறுப்பினர்களுக்கும் இடையில் கடுமையான வாக்குவாதங்கள் இடம்பெற்றன.

குறிப்பாக அமைச்சர் சமல் ராஜபக்சவுக்கும், எதிர்க்கட்சியின் எம்.பியான பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகாவுக்கும் இடையில் கடுமையான வாக்குவாதங்கள் இடம்பெற்றன.

“2010 மற்றும் 2015 க்கு இடையில் நான் அன்றைய அரசாங்கத்தால் அநியாயமாக நடத்தப்பட்டேன். மேன்முறையீடு செய்தும் நாடாளுமன்றம் வருவதற்கு அப்போதைய சபாநாயகர் வாய்ப்பு வழங்கவில்லை.” – என்றார் பொன்சேகா.

இதற்கு சமல் ராஜபக்ச பதிலளித்தார். இருவருக்குமிடையில் கடும் வாக்கு வாதம் ஏற்பட்டது. ஒரு கட்டத்தில் கடுமையாக கோபமடைந்த அமைச்சர் சமல் ராஜபக்ச, “பொன்சேகா ஒரு கழுதை” முடிந்தால் வெளியே வரவும் என சவால் விடுத்தார்.

Print Friendly, PDF & Email