SHARE

யாழ்ப்பாண மாநகர முதல்வர் வி.மணிவண்ணன் சற்று முன்னர் பயங்கரவாதத் தடுப்புப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

யாழ் நகர காவல் படை உருவாக்கப்பட்ட விடயம் தொடர்பாக இன்றிரவு 8 மணியளவில் யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்துக்கு அழைக்கப்பட்ட முதல்வர் மணிவண்ணன் சுமார் 6 மணிநேர விசாரணைகளின் பின்னரே கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட வி.மணிவண்ணன் யாழ்ப்பாணத்திலிருந்து வவுனியாவுக்கு பயங்கரவாத தடுப்பு பிரிவினரால் அழைத்து செல்லப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாண நகரத்தை சுத்தப்படுத்தும் நடவடிக்கைகளில் ஓர் அங்கமாக யாழ்.நகரக் காவல் படை என்னும் குழு யாழ்ப்பாண மாநகர சபையினால் உருவாக்கப்பட்டு நேற்று முன்தினம் பரிட்சார்த்த பணியும் இடம்பெற்றிருந்தது. குறித் காவல் குழு பொது இடங்களில் குப்பை கொட்டுவோர் பொது இடங்களில் வெற்றிலை உமிழ்வோரை தடுக்கும் வகையில் செயல்படுவதுடன் அதனை மீறுவோர் மீது தண்டம் அறிவிடும் எனவும் முதல்வர் மணிவண்ணன் விளக்கமளித்திருந்தார்.

இந்நிலையில் குறித்த காவல் படை குழு பயன்படுத்தயி சீருடை தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பால் பயன்படுத்தப்பட்ட சீருடை ஒன்றை ஒத்திருந்தது என்று தெரிவித்து பொலிஸார் விசாhரணைகளை ஆரம்பித்திருந்தனர். இதனையடுத்து குறித்த காவல் படையின் செயற்பாடுகள் இடைநிறுத்தப்பட்டதுடன் யாழ். மாநகர முதல்வர் மற்றும் ஆணையாளரிடம் பொலிஸார் வாக்குமூலம் பதிவு செய்திருந்தனர்.

அதேவேளை அந்த சீருடைகளை பெற்றுகொண்ட பொலிஸார் மேலதிக நடவடிக்கைகளுக்காக கொழும்புக்கு அனுப்பப்பட்டுள்ளது என்றும் தெரிவித்திருந்தனர்.

இந்நிலையிலேயே இன்று இரவு யாழ்.மாநகர முதல்வர் மணிவண்ணன் மீண்டும் யாழ். பொலிஸ் நிலையத்துக்கு விசாரணைக்காக அழைக்கப்பட்டு பின்னர் பயங்கரவாத தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

Print Friendly, PDF & Email