SHARE

யாழ்ப்பாணத்தில் மேலும் ஏழு பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று நேற்றுச் செவ்வாய்க்கிழமை உறுதி செய்யப்பட்டது என்று வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்தார்.

யாழ்ப்பாணம் போதனா வைத்திய சாலை, யாழ்ப்பாணம் பல்கலைக்கழக மருத்துவபீட ஆய்வுகூடங்களில் 643 பேரின் மாதிரிகள் நேற்றுப் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டன. இதன்போதே 7 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டது.

இதில், திருநெல்வேலி பாரதிபுரம் கிராமத்தில் சுயதனிமைப்படுத்தலிலிருந்த 5 பேருக்கும் சண்டிலிப்பாய் சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவில் சுயதனிமைப்படுத்தலில் இருவருக்கும் தொற்று கண்டறியப்பட்டது.

Print Friendly, PDF & Email