SHARE

பிரித்தானிய பிரதமர் வாசல்ஸ்தலத்தை நோக்கி சற்று முன்னர் ஆரம்பம்

விடுதலைப்புலிகள் மீதான பிரித்தானிய அரசின் தடையை நீக்கக்கோரி வேல்ஸிலிருந்து வெஸ்மினிஸ்டர் வரையிலான நீண்டதூர நடைபயணம் பிரித்தானிய பிரதமர் அலுவலகத்தை நெருங்கியுள்ளது.

சுமார் 120 மைல்களுக்கு மேல் நடந்து நேற்றைய தினம் லண்டன் மாநகருக்குள் நுழைந்த தமிழர்கள் குழு இன்று புதன் கிழமை காலை லண்டன் ஈலிங் அம்மன் ஆலய முன்றலிருந்து பிரித்தானிய பிரதமர் வாசஸ்தலத்தினை நோக்கிய தமது இறுதி நாள் நடைபயணத்தை சற்று முன்னர் ஆரம்பித்துள்ளனர்.

பிரதமர் வாசஸ்தலத்தை குறித்த நடைபயணம் சென்றடைந்தது விடுதலைப்புலிகள் மீதான தடையை நீக்க கோரிய மனுவொன்றும் பிரதமரிடம் கையளிக்கப்படவுள்ளது.

பிரித்தானியாவில் தமிழீழ விடுதலைப்புலிகள் மீதான தடைக்கு எதிராக நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் முன்னெடுத்திருந்த சட்டப்போராட்டத்தினில் தடையினை மறுபரிசீலனை செய்ய உள்துறை அமைச்சிற்கு சிறப்பு தீர்ப்பாயம் 90 நாட்கள் காலக்கெடு வழங்கியிருந்தது.

இந்தக்காலக்கெடு நெருங்கி வருகின்ற நிலையில் பிரித்தானியா வாழ் மக்கள் தடை நீக்கத்துக்கான அழுத்தத்தினை பிரித்தானிய அரசுக்கு முன்வைக்க வேண்டுமென்ற நோக்கிலும் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு அழுத்தங்களை வழங்கவேண்டுமென்ற நோக்கிலும் இந்த மாபெரும் நீண்ட தூர பரப்புரை நடைபயணம் இடம்பெற்று வருகின்றது.

இந்நிலையில் கடந்த 23 ஆம் திகதி வேல்ஸில் (CF99 1SN) ஆரம்பமான இந்த பரப்புரரை நடைபயணம் சுமார் 120 மைல்கள் கடந்து வந்துள்ள நிலையில் இன்றைய 6 ஆவது நாளில் லண்டன் ஈலிங் அம்மன் ஆலய முன்றலிலிருந்து வெஸ்மினிஸ்டரில் உள்ள பிரதமர் வாசல்ஸ்தலத்தை சென்றடையவுள்ளது.

Print Friendly, PDF & Email